06/20/2025

மின்னிதழ் 9

விளக்கின் ஒளியாம் விளக்கணித் திருவிழா!
விலகிப் போகும் விரைவாய்த் தொற்றும்!
மீண்டும் வசந்தம் மீள வேண்டும்!
ஆண்டு முழுதும் அமைதி வேண்டும்!
கடந்த நாட்கள் மனத்தின் பாரம்!
கடந்து போவோம் நீண்ட தூரம்!
விழாக்கள் வரட்டும்! விடியல் தரட்டும்!
அழைப்போம் நட்பை! அன்பின் உறவை!
இனிதாய் வாழ்த்த இனிமை சேரும்!
தனிமை போக்கித் தவிப்பை நீக்கி
மனத்தை மகிழ்வாய் மாறச் செய்வோம்!
இணக்க மிருந்தால் எதுவும் முடியும்!
தித்திப் பான தீஞ்சுவை இனிப்பு!
மத்தாப் பூவாம் மலராய்ச் சிதறும்!
ஒலிக்கும் வெடிகள் ஓசை கூட்டும்!
களிப்பாய்ப் பண்டிகைக் காட்சி அழகே!

மின்னிதழ் 8

தாய் மாண்ட சேதியறியாமல் கரமிரண்டால்
சேயிழுத்த கையறு நிலையிங்கே சூழ்ந்தது
நாய் சடலமுண்டு பசிதீர்க்கும் பஞ்சத்தால்
காயங்காக்கும் வழியின்றி பல்லுயிரும் மாண்டன

உறவே உயிரே

ராம்க்ருஷ் மலருக்கு மலர் கொடுத்துத் தொடங்கிய காதல்புலரும் காலைப் பொழுதாய் என்றுமுள்ள காதல்மலரும் மலர்களிலெல்லாம் தோன்றும் முகமேநிலவும் வானும் போலே ஒட்டி உறவாடும் காதல் காதல் உறவில் தோன்றிய என்னுயிரே உணர்வேசாதல் வரை தொடரும் …

நீ எந்தன் மனமேடை

தமிழ்நெஞ்சம் அமின்

மொழிகின்ற பேச்சினிலே
  முல்லைமலர்த் தேன்சொரிவாய் !
விழியென்றக் கருவண்டை
 வீசிடுவாய் மயங்கிடுவேன் !
அழிவில்லாப் பொற்றமிழே
 அறிவாயோ என்னிலமை ?
அருகினிலே இறுத்திவைத்து
 அருங்கவிகள் படைத்திட வா..

இமயமாய் உயர்ந்து நிற்கிறாய்

உன் அகக்கண்களெங்கும் அன்பின் ஊற்று
அழகிய வதனமெங்கும் அமைதியின் ஒளிக்கீற்று
பைந்தமிழின் ஈர்ப்பு உன்னுள் விசையேற்ற
பற்றுக் கொண்டோரை ஈர்க்கிறாய் தமிழ்த்தொண்டாற்ற

விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்டு – உன்
வெற்றிக்கிட்டாய் உறுதியாய் அடித்தளம்
திறமையுள்ளோரை அரவணைத்து அமைத்துக்
கொடுத்தாய் அவர்கட்குச் சிறப்புக்களம்

எத்திசைப் பறவைகட்கும் வேடந்தாங்கலாய் நீ
எங்கும் நிழல் தேடியலைவோர்க்கும் பெருவிருட்சம் நீ
அடரிருளில் தொலைவோர்க்கு ஒளிவிளக்காய் நீ
கரைகாணா கவிஞர்க்கும் கலங்கரை விளக்காய் நீ

சொல்லத் துடிக்கும் மனசு

ஆச வெட்டி போகல
ஆள விட்டு நீங்கல
கூரப் பட்டு கேட்கல
கொஞ்சங் கூட சரியில்ல…

வெட்கப்பட்டு நிக்கல
வேகம் ஏதும் எனக்கில்ல
ஓடி நீயும் போனாலும்
தேடி நானும் வருவேனே

உயிரில் கலந்த உணர்வே

புரிதலில் விளைந்த புனிதமான காதலிது
தெரிந்த நாள்முதல் விரியும் நேசமிது
பிரியாமல் பிணைகின்ற பிம்பங்கள் இது
விரிகின்ற காதல் முறையான வாழ்வாகுமே

உரமான உண்மைக் காதல் உணர்வானது
தரமான உள்ளங்களின் இணைப்பில் ஆனது
வரமாக வருகின்ற வரவாக நிறைவானது
மரபிலும் மாண்பிலும் உருவான காதலிது

எண்ணமடை திறந்தது

சின்னயிடைப் பெண்ணழகைத் தாங்கும்!
சிந்தையதைத் தினமெண்ணி ஏங்கும்!
அன்னநடை காட்டிநடம் ஆடும்!
அவளழகைக் குயிலினங்கள் பாடும்

கன்னிவுடல் பொன்னிறத்தைக் காட்டும்!
கவியுள்ளம் கற்பனையை நாட்டும்!
உண்ணத்தடை போடுவதேன் நெஞ்சம்!
உடல்முழுதும் வெப்பநிலை விஞ்சும்!

பிரார்த்தனை

மதமெங்கே நிறமெங்கே சாதி யெங்கே?
மதில்கட்டிப் பிரித்தவர்தம் மமதை யெங்கே?
மார்க்கத்தை வழிமுறையைத் தவற விட்டு
மதம்பிடித் தலைந்திட்ட கூட்ட மெங்கே?
எதுபிழையோ? எதுதவறோ? எதனால் தானோ
இச்சிறிய வைரஸெமைத் தாக்கிற் றிங்கே!

ஒருசிறிய “கொரொணா” வை ஏவி விட்டு
ஓரிறையே எமையெல்லாம் சோதித் தானோ?
ஒன்றுஇறை, ஒன்றுகுலம் என்றிட் டானோ?
ஒன்றுமறி யாதிருந்து வருந்து கின்றோம்!