06/20/2025

மின்னிதழ் 12

நூல்கள், சஞ்சிகைகளின் முதற்பிரதியை வாங்கி கின்னஸ் புத்தக உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் புரவலர் ஹாஷிம் உமர் ஆவார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பாட்டலியா எனும் நகரில் உமர், ஹவ்வா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். சிறு குழந்தையாக இருந்த போதே குடும்பத்தினருடன் இலங்கைக்கு குடிபெயர்ந்த இவரின் தாய்மொழி மேமனாகும். இருப்பினும் தமிழ்மொழி மீது இவர் கொண்ட தீராத பற்று, இலக்கிய உலகில் இவர் பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்றதெனலாம். இலக்கிய ஆர்வலராக பல்லாயிரம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தது மட்டு மல்லாமல், எழுத்தாளர்களின் முதற் பிரதியைப் வாங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும் மாபெரும் பணியை 1994 ஆண்டு முதல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரின் அளப்பரிய முயற்சியும், ஆர்வமும் இலங்கையுடன் மட்டுப்படாமல் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்று முதற்பிரதியை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான முதற் பிரதிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

மின்னிதழ் 11

Dr ஜலீலா முஸம்மில் MBBS (SL)

இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்டவர்.

கடந்த 14 வருடங்களாக வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வருகிறார். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமை புரிகிறார்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் கடமை புரிந்தவர்.