கவிஞர் ராம்க்ருஷ்
தயிரில் மறைந்த வெண்ணெய் என
தங்கத்தில் கலந்திடும் செம்பு எனவும்
இதயத்தில் நிறைந்தவளே என் காதலியே
என்னுயிரில் கலந்திட்ட உள் உணர்வே
இதய ஊஞ்சலில் இடையறாது ஆடுகிறாய்
உதயமான காதல் மேடையில் பாடுகிறாய்
சதயத் திருவிழாவிலே சந்தித்த நாளிது
இதமான அந்தி மாலையாய் ஆக்குவோமே
புரிதலில் விளைந்த புனிதமான காதலிது
தெரிந்த நாள்முதல் விரியும் நேசமிது
பிரியாமல் பிணைகின்ற பிம்பங்கள் இது
விரிகின்ற காதல் முறையான வாழ்வாகுமே
உரமான உண்மைக் காதல் உணர்வானது
தரமான உள்ளங்களின் இணைப்பில் ஆனது
வரமாக வருகின்ற வரவாக நிறைவானது
மரபிலும் மாண்பிலும் உருவான காதலிது
கண்ணின் இமையாகக் காவல் இருப்பேன்
பெண்ணின் சுதந்திரத்தில் கவனம் வைப்பேன்
எண்ணிலடங்கா ஏற்றங்களின் ஏணி ஆவேன்
மண்ணின் மாண்பாகக் காதல் வளர்ப்பேனே