06/20/2025

உயிரில் கலந்த உணர்வே

கவிஞர் ராம்க்ருஷ்

தயிரில் மறைந்த வெண்ணெய் என
தங்கத்தில் கலந்திடும் செம்பு எனவும்
இதயத்தில் நிறைந்தவளே என் காதலியே
என்னுயிரில் கலந்திட்ட உள் உணர்வே

இதய ஊஞ்சலில் இடையறாது ஆடுகிறாய்
உதயமான காதல் மேடையில் பாடுகிறாய்
சதயத் திருவிழாவிலே சந்தித்த நாளிது
இதமான அந்தி மாலையாய் ஆக்குவோமே

புரிதலில் விளைந்த புனிதமான காதலிது
தெரிந்த நாள்முதல் விரியும் நேசமிது
பிரியாமல் பிணைகின்ற பிம்பங்கள் இது
விரிகின்ற காதல் முறையான வாழ்வாகுமே

உரமான உண்மைக் காதல் உணர்வானது
தரமான உள்ளங்களின் இணைப்பில் ஆனது
வரமாக வருகின்ற வரவாக நிறைவானது
மரபிலும் மாண்பிலும் உருவான காதலிது

கண்ணின் இமையாகக் காவல் இருப்பேன்
பெண்ணின் சுதந்திரத்தில் கவனம் வைப்பேன்
எண்ணிலடங்கா ஏற்றங்களின் ஏணி ஆவேன்
மண்ணின் மாண்பாகக் காதல் வளர்ப்பேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *