06/20/2025

மின்னிதழ் 10

இவரின் சமூகசேவையானது இலங்கை உட்பட, உலகின் பல பாகங்களிலும் உள்ள வாழ்வாதாரமற்ற பல்லாயிரம் ஏழைகளை வாழ்வித்து வருகிறது. இவரின் சிறுவயதிலிருந்தே இல்லாதோருக்கு உதவவேண்டுமென்றிருந்த கனவு மெய்ப்பட இவரின் உழைப்பும் விடாமுயற்சியும் கைகொடுத்துள்ளன. அதோடு (உதவும் கரங்கள்) helping hand Zaithoon Nhar foundation எனும் தொண்டு நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு நிறுவி, உலகளாவிய ரீதியில் உதவி தேவைப்படுவோருக்கெல்லாம் தன் நேசக்கரங்களை நீட்டி அரவணைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த வெற்றிகரமான முயற்சிக்குப், பல தாராள மனப்பான்மையுள்ள பொதுநல சேவை மனப்பான்மை கொண்ட பலரும் கரம் கோர்த்து உதவி வருவதும் பாராட்டுக்குரிய விடயமாகும். இவரில் துளிர்த்த மனிதநேயம், பல்லாயிரம் மக்களின் மனங்களிலும், அவர்களின் இருகரமேந்திய பிரார்த்தனைகளிலும் இவரை இருத்தியுள்ள தென்றால் மிகையாகாது.