08/04/2025

மின்னிதழ் 11

Dr ஜலீலா முஸம்மில் MBBS (SL)

இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்டவர்.

கடந்த 14 வருடங்களாக வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வருகிறார். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமை புரிகிறார்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் கடமை புரிந்தவர்.

மின்னிதழ் 10

இவரின் சமூகசேவையானது இலங்கை உட்பட, உலகின் பல பாகங்களிலும் உள்ள வாழ்வாதாரமற்ற பல்லாயிரம் ஏழைகளை வாழ்வித்து வருகிறது. இவரின் சிறுவயதிலிருந்தே இல்லாதோருக்கு உதவவேண்டுமென்றிருந்த கனவு மெய்ப்பட இவரின் உழைப்பும் விடாமுயற்சியும் கைகொடுத்துள்ளன. அதோடு (உதவும் கரங்கள்) helping hand Zaithoon Nhar foundation எனும் தொண்டு நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு நிறுவி, உலகளாவிய ரீதியில் உதவி தேவைப்படுவோருக்கெல்லாம் தன் நேசக்கரங்களை நீட்டி அரவணைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த வெற்றிகரமான முயற்சிக்குப், பல தாராள மனப்பான்மையுள்ள பொதுநல சேவை மனப்பான்மை கொண்ட பலரும் கரம் கோர்த்து உதவி வருவதும் பாராட்டுக்குரிய விடயமாகும். இவரில் துளிர்த்த மனிதநேயம், பல்லாயிரம் மக்களின் மனங்களிலும், அவர்களின் இருகரமேந்திய பிரார்த்தனைகளிலும் இவரை இருத்தியுள்ள தென்றால் மிகையாகாது.

மின்னிதழ் 9

விளக்கின் ஒளியாம் விளக்கணித் திருவிழா!
விலகிப் போகும் விரைவாய்த் தொற்றும்!
மீண்டும் வசந்தம் மீள வேண்டும்!
ஆண்டு முழுதும் அமைதி வேண்டும்!
கடந்த நாட்கள் மனத்தின் பாரம்!
கடந்து போவோம் நீண்ட தூரம்!
விழாக்கள் வரட்டும்! விடியல் தரட்டும்!
அழைப்போம் நட்பை! அன்பின் உறவை!
இனிதாய் வாழ்த்த இனிமை சேரும்!
தனிமை போக்கித் தவிப்பை நீக்கி
மனத்தை மகிழ்வாய் மாறச் செய்வோம்!
இணக்க மிருந்தால் எதுவும் முடியும்!
தித்திப் பான தீஞ்சுவை இனிப்பு!
மத்தாப் பூவாம் மலராய்ச் சிதறும்!
ஒலிக்கும் வெடிகள் ஓசை கூட்டும்!
களிப்பாய்ப் பண்டிகைக் காட்சி அழகே!

மின்னிதழ் 8

தாய் மாண்ட சேதியறியாமல் கரமிரண்டால்
சேயிழுத்த கையறு நிலையிங்கே சூழ்ந்தது
நாய் சடலமுண்டு பசிதீர்க்கும் பஞ்சத்தால்
காயங்காக்கும் வழியின்றி பல்லுயிரும் மாண்டன

மின்னிதழ் 7

பேச்சுத் திறமை என்பது, எல்லோருக்கும் இருக்கிறது.
தற்காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகத் திறமையான பேச்சாளர்களாக திகழ்கிறார்கள்.
பிறந்து, கிட்டத்தட்ட இரண்டு வருடங் களில், தெளிவாக பேசக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
ஆனால், வளர்ந்து வாலிப மடைந்து, வயது முதிர்ந்த நிலையில் கூட..எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக் கொள்வதேயில்லை.
எங்கு, யாரிடம்,, எப்படி, என்ன பேச வேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொண்டால், வாழ்வில் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
எதற்கெடுத்தாலும் குறை கூறித் திரியாதீர்கள்.

உறவே உயிரே

ராம்க்ருஷ் மலருக்கு மலர் கொடுத்துத் தொடங்கிய காதல்புலரும் காலைப் பொழுதாய் என்றுமுள்ள காதல்மலரும் மலர்களிலெல்லாம் தோன்றும் முகமேநிலவும் வானும் போலே ஒட்டி உறவாடும் காதல் காதல் உறவில் தோன்றிய என்னுயிரே உணர்வேசாதல் வரை தொடரும் …