06/20/2025

மின்னிதழ் 15

அறிமுகம் / மின்னிதழ்

புதுக்கவிதைகளை எழுதி, கவியரங்களில் வாசித்து வந்த பிரவந்திகாவிற்கு பல அமைப்புகள் பாராட்டும் ஊக்கமும் தந்தன. அவ்வகையில் «கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம்» வழங்கிய «இளங்கவி» விருதினை பாடலாசிரியர் நிகரன் கரங்களால்  பெற்றார். «கவிமலர்கள் 1130 கவிதைகளின் சங்கமம்» என்ற நூலிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன

பல சிறார் அமைப்புகளின் வாயிலாக பன்னாட்டுக் குழந்தைகளுக்கும் கதை சொல்லி வரும் இவர், சிறுவர் கதைப் புத்தகங்களை விமர்சனமும் செய்து வருகிறார். இவர் எழுதிய நூல் விமர்சனங்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து சிறுவர்களுக்கானக் கதைகளை எழுதத் துவங்கினார். உழவுக்கவிஞர் உமையவன் தொகுத்த ‘அந்தியில் மலரும் மொட்டுகள்’, புத்தக நண்பன் குழு தொகுத்த ‘சுக்கா...புக்கா... முக்கா...’ தொகுப்பு நூல்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் அன்புச்செல்வி சுப்புராஜூ  தொகுத்த ‘குட்டி மேகங்கள் தூவிய தூறல்கள்’ மற்றும்  ‘வாண்டுகள் சொன்ன கதைகள்’ புத்தகங்களில் இவர் எழுதிய கதைகள் வெளிவந்துள்ளன. ‘வெட்சி’ இலக்கிய இதழில் இவரது கதை வெளிவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ‘தமிழ்நெஞ்சம்’ இதழில் இவரது பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
நவம்பர் – டிசம்பர் 2022

மேலேயுள்ள நவம்பர் – டிசம்பர் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

புதுக்கவிதைகளை எழுதி, கவியரங்களில் வாசித்து வந்த பிரவந்திகாவிற்கு பல அமைப்புகள் பாராட்டும் ஊக்கமும் தந்தன. அவ்வகையில் «கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம்» வழங்கிய ”இளங்கவி” விருதினை பாடலாசிரியர் நிகரன் கரங்களால் பெற்றார். ”கவிமலர்கள் 1130 கவிதைகளின் சங்கமம்” என்ற நூலிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன

பல சிறார் அமைப்புகளின் வாயிலாக பன்னாட்டுக் குழந்தைகளுக்கும் கதை சொல்லி வரும் இவர், சிறுவர் கதைப் புத்தகங்களை விமர்சனமும் செய்து வருகிறார். இவர் எழுதிய நூல் விமர்சனங்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து சிறுவர்களுக்கானக் கதைகளை எழுதத் துவங்கினார். உழவுக்கவிஞர் உமையவன் தொகுத்த ‘அந்தியில் மலரும் மொட்டுகள்’, புத்தக நண்பன் குழு தொகுத்த ‘சுக்கா…புக்கா… முக்கா…’ தொகுப்பு நூல்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் அன்புச்செல்வி சுப்புராஜூ தொகுத்த ‘குட்டி மேகங்கள் தூவிய தூறல்கள்’ மற்றும் ‘வாண்டுகள் சொன்ன கதைகள்’ புத்தகங்களில் இவர் எழுதிய கதைகள் வெளிவந்துள்ளன. ‘வெட்சி’ இலக்கிய இதழில் இவரது கதை வெளிவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ‘தமிழ்நெஞ்சம்’ இதழில் இவரது பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

6 thoughts on “மின்னிதழ் 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *