06/20/2025

மின்னிதழ் 14

செப்டெம்பர் – அக்டோபர் 2022

மேலேயுள்ள செப்டெம்பர் – அக்டோபர் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

அன்பின் வாசகர்களுக்கு வணக்கம்!

காலச்சூழலும், இயற்கையும் எம்மைப் புரட்டிப் போட்டு பந்தாடும் நிலையில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. நம்நாட்டில் வாழ்க்கைச் செலவும், காலநிலைச் சீர்கேடுகளும் மிக மோசமாக மக்களின் அன்றாட வாழ்வியலைப் பாதித்திருப்பதால் வீண்செலவுகளையும் பயனற்ற வெளிப் பயணங்களையும் தவிர்த்து, எல்லாவற்றையும் கவனமாகக் கையாள்வோம். அதேசமயம், இந்நேரத்தில் அல்லலுறும் ஒரு சிலருக்காவது எம்மால் இயன்றளவு கைகொடுப்போம். முயற்சித்தால் நம்மால் முடியாதது ஏதுமில்லை. நிரந்தரமே இல்லா இவ்வாழ்க்கைப் பயணத்தில் நம் முகமூடிகளை அகற்றி, நமக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாகவும் மனிதநேயத்துடனும் வாழக் கற்றுக் கொள்வோம்.

நன்றி!

Wafeera Wafi

84 thoughts on “மின்னிதழ் 14

  1. கவிமகள் ஜெயவதியின் ‘அணங்கே அகிலம் வெல்’ கவிதை நூலுக்கு மதிப்புரை

    தமிழ்மொழியின் அழகுக்கு மென் மேலும் அழகு சேர்த்துக் காப்பது தமிழ் இலக்கியங்களே! எத்தனை நூற்றாண்டுகள் போனாலும், இளமை மாறாமல் இன்று வரை கோலோச்சும் தமிழன்னைக்கு பக்க பலமாய் கவரி வீசும் இலக்கியங்களைப் பார்த்தோமானால் கவிதைகளுக்கென்றே தனியிடம் உண்டு. கவிமகள் ஜெயவதி நித்தியானந்தனின் முதல் கவிதை நூலும் அப்படியான ஒன்றென சொல்லி மகிழலாம். ‘அணங்கே அகிலம் வெல்’ தலைப்பே, உள்ளடங்கும் காத்திரமான கவிதைகளுக்குக் கட்டியங் கூறி வரவேற்பதைக் காணலாம். இவரின் கவிதை வரிகளில் பெண்களுக்கான அறிவுரைகளும், விழிப்புணர்வைத் தூண்டும் வீரியமிக்க கருத்துகளும் விரவிக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இவரின் எழுத்து களில் நான் பாரதியைக் காண்கிறேன். பெண்களைப் பற்றிய ஆதங்கம் பெருந்தீயாக மூள்வதைக் காண்கிறேன்.

    வாருங்கள், எரிதழலின் வெப்பச் சலனத்தில் புடம் போட்ட சில வரிகளை பக்குவமாய் ரசிப்போம்.

    ‘தன்னம்பிக்கை’ யின் சொற்கள் கொண்டு விற்போர் செய்கிறார் இப்படி…

    ‘வாய்ப்பு என்பது
    வரமாகக் கிடைப்பதல்ல
    வலியோடு போராடு
    வானம் உன் வசமே’
    ‘நாளை எண்ணி
    நகர்த்தாதே நங்காய்
    நாணாய் இருந்து
    நகர்த்திடு அம்பை’

    ‘கல்வி ஒன்றே
    காட்டிடும் நற்கதி
    செல்லும் வாழ்வில்
    செதுக்கிடும் உள்ளொளி’

    தொடுவானம் தூரமில்லை யென்றே கூறி

    ‘உழைத்து வாழ்பவனுக்கே
    வாழ்வது சொந்தம்
    ஊக்கம் கொண்டு
    வாழ்வினைச் செதுக்கிடு’
    முன்னேறிச் செல்ல’
    என வழி காட்டுகிறார்.

    திருத்தி எழுதுங்கள் (தே)வதைகள் வேண்டாமென்று எனும் கவிதையின் அத்தனை வரிகளும் சாட்டையாய் சொடுக்கிப் போக, எதை எடுப்பது எதை விடுவதென எனக்குள்ளே குழப்பங்கள். எழுச்சியூட்டும் கவிதைகள் பலவுண்டு ரசிக்க. எல்லாமே நூலாசிரியரின் கை வண்ணத்தில் நெய்யப் பட்டு நெக்குருக வைக்கின்றன.

    அகிலம் வெல்வாள் இவ்வணங்கு. தமிழுலகு போற்றும் நன்னூல்கள் பல இலக்கியத்துக்காய் படைக்க, இவரின் எழுத்தாணி நிமிர்ந்தெழட்டுமென நல் வாழ்த்துக் கூறுகிறேன்.

    – தமிழமின்

  2. Мир полон тайн https://phenoma.ru читайте статьи о малоизученных феноменах, которые ставят науку в тупик. Аномальные явления, редкие болезни, загадки космоса и сознания. Доступно, интересно, с научным подходом.

  3. Научно-популярный сайт https://phenoma.ru — малоизвестные факты, редкие феномены, тайны природы и сознания. Гипотезы, наблюдения и исследования — всё, что будоражит воображение и вдохновляет на поиски ответов.

  4. Научно-популярный сайт https://phenoma.ru — малоизвестные факты, редкие феномены, тайны природы и сознания. Гипотезы, наблюдения и исследования — всё, что будоражит воображение и вдохновляет на поиски ответов.

  5. Защитные кейсы plastcase.ru/ в Санкт-Петербурге — надежная защита оборудования от влаги, пыли и ударов. Большой выбор размеров и форматов, ударопрочные материалы, индивидуальный подбор.

  6. Клининг витрин и фасадов с применением профессионального оборудования
    клининг заказать [url=https://www.kliningovaya-kompaniya10.ru]https://www.kliningovaya-kompaniya10.ru[/url] .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *