09/27/2025

எண்ணமடை திறந்தது

சின்னயிடைப் பெண்ணழகைத் தாங்கும்!
சிந்தையதைத் தினமெண்ணி ஏங்கும்!
அன்னநடை காட்டிநடம் ஆடும்!
அவளழகைக் குயிலினங்கள் பாடும்

கன்னிவுடல் பொன்னிறத்தைக் காட்டும்!
கவியுள்ளம் கற்பனையை நாட்டும்!
உண்ணத்தடை போடுவதேன் நெஞ்சம்!
உடல்முழுதும் வெப்பநிலை விஞ்சும்!

பிரார்த்தனை

மதமெங்கே நிறமெங்கே சாதி யெங்கே?
மதில்கட்டிப் பிரித்தவர்தம் மமதை யெங்கே?
மார்க்கத்தை வழிமுறையைத் தவற விட்டு
மதம்பிடித் தலைந்திட்ட கூட்ட மெங்கே?
எதுபிழையோ? எதுதவறோ? எதனால் தானோ
இச்சிறிய வைரஸெமைத் தாக்கிற் றிங்கே!

ஒருசிறிய “கொரொணா” வை ஏவி விட்டு
ஓரிறையே எமையெல்லாம் சோதித் தானோ?
ஒன்றுஇறை, ஒன்றுகுலம் என்றிட் டானோ?
ஒன்றுமறி யாதிருந்து வருந்து கின்றோம்!